Tuesday, November 21, 2006

Kavidhai

Satutory Warning :-

The following Kavidhai doesn't belongs to me....

Courtesy : Karthick Prabhu G...I am an ardent fan of his following creations...

Topic : - அத்தை பெண்கள் என்னும் அழகிகள்...

நான் சிகரெட் பிடிப்பதை என் அம்மாவிடம்சொல்லி விடுவாய் என்று சொன்னாய்பரவாயில்லை சொல் அப்படியே உனக்குஎன்னை பிடிப்பதையும் சொல் என்றால்வெட்கப் பட்டு ஓடி விடுகிறாய்இப்படித்தான் தப்பித்துக் கொள்கிறேன் ஒவ்வொரு முறையும்..!!

சிறு வயதில் நம்மிருவருக்கும் மொட்டையடித்துகோவிலில் சாமி முன்னே 'இவனுக்கு இவள் தான்'என என் அப்பாவும் உன் அப்பாவும் சத்தியம் செய்தஒரே காரணத்திற்க்காக மட்டும் தான் என்னைகல்யாணம் செய்து கொள்ள போவதாக சொல்கிறாய்அதற்காக மட்டும் தானா?....என நான் இருமுறை அழுத்திக் கேட்டால்'ச்சி போடா' என்று முகத்தை பொத்திக் கொள்கிறாய்

நாமிருவரும் ஒன்றாய் அமர்ந்து படிக்கும் சமயங்களில்தெரியாமல் புத்தகத்தை மிதித்து விடும் என்னிடம்'டேய் அது சரஸ்வதிடா தொட்டு கும்பிடுடா என்கிறாய்'தெரிந்தே உன் கால்களை உரசி விட்டு'டீ நீ தேவதைடி' என்று தொட்டு கும்பிட வந்தாலோமுறைத்து விட்டு பின் துரத்த ஆரம்பிக்கிறாய்.

No comments: